பிரதமரின் சென்னை வருகை – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

பிரதமர் மோடி சென்னை வரவுள்ள நிலையில், தமிழில் ட்வீட்.

பிரதமர் மோடி சென்னை வரவுள்ள நிலையில், தமிழில் ட்வீட்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னை வருகிறார். அதன் பின், சென்னை விமான நிலைய புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார்.

இதற்காக சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரதமர் மோடி வருகை காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் தமிழில் ட்வீட்

இந்த நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னையில்,விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து, சென்னை – கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவக்கி வைத்து, பிறகு ஶ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு நிறுவன விழாவிலும் கலந்து கொள்ள உள்ளேன்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node