கட்சி லெட்டர் பேடை தவறாக பயன்படுத்துகிறார் ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பு

According to party rules, OPS has been removed from AIADMK.

Chennai High Court

கட்சி விதிப்படி அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார் என இபிஎஸ் தரப்பு வாதம்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 3-வது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில், ஈபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஈபிஎஸ் தரப்பில், ‘ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஒருங்கிணைப்பாளர் என கூறி வருகிறார். மேல்முறையீட்டு வழக்கில் முடிவு வரும் வரை என்ன நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று தவிர்த்து வருகிறோம். கட்சி விதிப்படி அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார் என இபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓபிஎஸ் கட்சியின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி நிர்வாகிகளை நீக்கி வருகிறார். அதிமுகவின் பொதுக்குழு முடிவு என்பது அனைத்து உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.