இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அநீதிக்கு தொடர்ச்சியாக துணை நிற்கின்றனர் – சீமான்

Seeman manpr

சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மதத்தின் அடிப்படையில் மனிதர்களை கணக்கிடுவது தவறு.

மதம் என்பது மாறக்கூடியது அதை வைத்து எப்படி மனிதரை கணக்கிட முடியும்? நேற்று இந்துவாக இருந்தவர் இன்று இஸ்லாமியராக மாற முடியும். அதை வைத்து கணக்கிட கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அநீதிக்கு தொடர்ச்சியாக துணை நிற்கின்றனர். இந்த ஆதங்கத்தில் தான் சாத்தானின் பிள்ளைகளாக மாறிவிட்டீர்களே என்று நான் அந்த கருத்தை சொன்னேன். இலங்கையில் தமிழினத்தை கொன்று குவித்த காங்கிரசுக்கு துணை போகிறீர்களே? என்ற ஆதங்கம் தான் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக சீமான் அவர்கள், இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என தெரிவித்திருந்தார். இதற்க்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், சீமான் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்