மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று மதியம் செய்தியாளர்களை சந்திப்பு.

Lok Sabha Speaker Om Birla meets reporters this afternoon.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று மதியம் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதியன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.ஆனால்,கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்து பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால்,அனைத்து நாட்களிலும் நாடாளுமன்றம் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக,ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்னரே, இன்றுடன் கூட்டத்தொடர் நிறவடையவுள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்து வைக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில்,மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று மதியம் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.