ஐ.நா.,வில் சர்வதேச யோகா தினம் – பிரதமர் மோடி பங்கேற்பு..!

Prime Minister Modi spoke of yoga as India's gift to the entire world.

PM Modi

ஒட்டுமொத்த உலகுக்கு இந்தியா அளித்த பரிசு யோகா என பிரதமர் மோடி பேச்சு.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு, 25ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அமெரிக்காவில் உள்ள ஐ.நா சபை தலைமையகத்தில் உலக யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து  கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 180 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், யோகா என்பது வாழ்க்கையின் நெறிமுறை. இது சக்தி வாய்ந்தது. இது உங்கள் வயது, பாலினம் மற்றும் உடற்பயிற்சி நிலைக்கு ஏற்றது. அனைத்து இன மதங்களுக்கும் பொதுவானது. ஒட்டுமொத்த உலகுக்கு இந்தியா அளித்த பரிசு யோகா. யோகாவின் சக்தியை பயன்படுத்துவோம். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இலக்கை நினைவாக்க ஒன்றிணைவோம் என தெரிவித்துள்ளார்.