பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன்..! காவலர்களுக்கு சைலேந்திர பாபு கடிதம்...!

Retired Shailendra Babu has written a letter of thanks to the constables.

DGP Sylendra babu

ஓய்வுபெற்ற சைலேந்திர பாபு அவர்கள் காவலர்களுக்கு நன்றி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழக காவல்துறையின் டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு அவர்கள் ஒய்வு பெற்றுள்ளார். தற்போது தமிழக காவல்துறையின 32-வது டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றார். இந்த நிலையில், ஓய்வுபெற்ற சைலேந்திர பாபு அவர்கள் காவலர்களுக்கு நன்றி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், உங்களுக்கு தலைமை தாங்கியதை பெருமையாக நினைக்கிறேன்; துறை நமக்கு செய்ததை போன்று, துறைக்கு நாம், கைமாறு செய்ய வேண்டும்; பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன்; பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்.

பொதுமக்கள் மனதில் இடம்பிடிப்பது நமது லட்சியமாக இருக்க வேண்டும்; குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, உண்மை தன்மையை கண்டறிந்து திருத்தி கொள்ளவேண்டும். இரண்டாண்டு காலம் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்தோம்.

தவறாக ஒருவரையும் குற்றவாளியாக்கவில்லை; குற்றம் செய்த யாரையும் விடவில்லை. தமிழ்நாட்டில் சாதிச் சண்டை, மதக் கலவரம், இரயில் கொள்ளை, வங்கிக் கொள்ளை இல்லை. காவலர்கள் பொதுமக்களிடம் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும் உடல்நலம், மனநலம் காக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன்..! காவலர்களுக்கு சைலேந்திர பாபு கடிதம்...!