மக்களின் கவனத்திற்கு..! கேழ்வரகு வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்..!

குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்படவுள்ளது.

radhakrishnan

குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்படவுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில், வேளாண் பட்ஜெட்டில் பொதுமக்களுக்கான பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்புகளில் ஒன்று தான் குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம்.

வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்படவுள்ளது.  நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் முதற்கட்டமாக தொடங்கப்படும் என்றும்,  இத்திட்டம் படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் அளித்துள்ளார்.