முதலமைச்சர் பழனிசாமிக்கு இது தெரியுமா ? தெரியாதா ? – திருமாவளவன்

Does Chief Minister Palanisamy know this? Don't know? - Thirumavalavan

பிரதமர் மோடி என்ன நினைக்கிறார் என்றால் எப்படியாவது தேர்தலில் இரண்டாம் இடத்திற்கு வந்துவிட வேண்டும் என்று நினைப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

என்எல்சி நிர்வாகத்தைக் கண்டித்து நெய்வேலியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில்,தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு என்ன விஷயத்தை கையில் எடுத்தால் வாக்கினை பெறலாம் என்று தெரியும்.அவர் இரண்டு வழி உள்ளதாக நினைக்கிறார்.ஓன்று ஜாதி சண்டையை தூண்டலாம்.மற்றொன்று ஈவிஎம் இயந்திரத்தில் திருட்டு வேலை பார்ப்பது,அவர் என்ன நினைக்கிறார் என்றால் எப்படியாவது இரண்டாம் இடத்திற்கு வந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்.

திமுக கூட்டணி வெற்றிபெற்றுவிடும்.அப்போம் இரண்டாம் இடத்திற்கு வர வேண்டும் என்றால் அதிமுகவை வருகின்ற தேர்தலில் காலி செய்ய வேண்டும்.இது முதலமைச்சர் பழனிசாமிக்கு தெரியுமா ? தெரியாதா ? என்று தெரியவில்லை.ஆனால் அவருக்கு இது  தெரியும் .வேறு வழியில்லாமல் மாட்டிக்கொண்டுள்ளார் என்று பேசியுள்ளார்.