விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் 3 மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். அங்கு, அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதனை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, அரசு மறுவாழ்வு இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்து, அங்கு இருந்த தொழு நோய் மையத்தில் இருப்பவர்களின் நிறைகுறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்
unknown nodeபின் முதல்வர் மு.க.ஸ்டாலின், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் 3 மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் உடன் முதல்வர் கலந்துரையாடி அவர்களது நிறைகுறைகளை கேட்டு அறிந்தார்.