டோக்கியோவில் NEC Future Creation Hub-ஐ பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...!

The Chief Minister visited the NEC Future Creation Hub and inquired about the facilities there

MK Stalin

NEC Future Creation Hub-ஐ முதலமைச்சர் பார்வையிட்டு, அங்குள்ள வசதிகளை கேட்டறிந்தார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 23-ஆம் தேதி 9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். சென்னையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலகம் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காகவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் இந்த பயணத்தை மேற்கொண்டார்.

இந்த நிலையில், இன்று டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்; NEC Future Creation Hub-ஐ முதலமைச்சர் பார்வையிட்டு, அங்குள்ள வசதிகளை கேட்டறிந்தார்; பொது பயன்பாட்டு வசதிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.