ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆய்வு

Chief Minister Palanisamy and Deputy Chief Minister Panneer Selvam inspected the final stages of the Jayalalithaa memorial.

ஜெயலலிதா நினைவிடத்தின் இறுதிகட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்  ஆய்வு மேற்கொண்டனர்.

ஜெயலலிதா நினைவிடத்தை  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.வருகின்ற 27-ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் திறந்து வைக்க உள்ளதாகவும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.இதன் பின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தின் இறுதிகட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்  ஆய்வு மேற்கொண்டனர்.