அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகன் சிவக்குமார் மீது வழக்கு பதிவு
நீலகிரி மாவட்டம் உதகை அருகே எஸ்டேட்டுக்கு சாலை அமைத்த புகாரில் அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகன் சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகன் மீது வழக்குப்பதிவு
unknown nodeவிதிகளை மீறி காப்புக்காட்டில் சாலை அமைத்ததாக அமைச்சர் மருமகன் சிவக்குமார் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சிவக்குமார், எஸ்டேட் மேலாளர் பாலமுருகன், ஜேசிபி ஓட்டுநர்கள் உமர்பாருக், பங்கஜ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
சிவக்குமாரை முதல் குற்றவாளியாக சேர்த்து ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், கோத்தகிரி நீதிமன்ற உத்தரவுபடி வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை தகவல் அளித்துள்ளது