ஏப்ரல் 21 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அறிவிப்பு.
சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு பின், ஏப்ரல் 21 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
மார்ச் 23,24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்றும், 29-ஆம் தேதி முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
வேளாண் பட்ஜெட் தாக்கல்
நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.