மீண்டும் செங்கல் பிரச்சாரமா..? பொறுத்திருந்து பாருங்கள்..! – உதயநிதி

நேரு உள்விளையாட்டு அரங்கில் பயிற்சியை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் உதயநிதி பேட்டி.

நேரு உள்விளையாட்டு அரங்கில் பயிற்சியை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் உதயநிதி பேட்டி.

சென்னை கிரீம்ஸ்  சாலையில் உள்ள லலித்கலா அரங்கில் தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் புகைப்படக் கண்காட்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டார்.

unknown node

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விளையாட்டு வீரர்களுக்கு போதுமான கட்டமைப்புகள் தமிழகத்தில் உள்ளது. ஆனால் கட்டமைப்புகள் குறித்த விழிப்புணர்வு விளையாட்டு வீரர்களிடம் இல்லாமல்  இருக்கிறது.

விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகள் தொடர்பாக விளையாட்டுத்துறை செயலாளரிடம் பேசி உள்ளேன். அனைத்து விளையாட்டுக்களுக்கும் போதுமான பயிற்சியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், நேரு உள்விளையாட்டு அரங்கில் பயிற்சியை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனை கட்டுமானம் தொடங்காததை கண்டித்து கடந்த தேர்தலில் செங்கலை காட்டி பிரச்சாரம் செய்திருந்தேன். மீண்டும் அது போன்ற பிரச்சாரத்தில் ஈடுபடுவேனா என்று பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்துள்ளார்.