#BreakingNews : டிசம்பர் 31-ஆம் தேதி கட்சி அறிவிப்பு – ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை

Rajinikanth is in consultation with the executive today as the party has announced that the announcement will be made on December 31.

டிசம்பர் 31-ஆம் தேதி கட்சி அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவித்த நிலையில்  இன்று நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்வதாக ரஜினி அறிவித்தார்.

இதனிடையே ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில் பெங்களூரில் உள்ள தனது அண்ணன் சத்யநாராயணாவை சந்தித்து ஆசி பெற்றார்.பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பிய நிலையில் ,கட்சியை பதிவு செய்வது,கட்சித் குறித்து அறிவிப்பது உள்ளிட்டவை தொடர்பாக ராகவேந்திரா மண்டபத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் ரஜினிகாந்த்.இந்த ஆலோசனையில் தமிழருவி மணியன், அர்ஜூன மூர்த்தி மற்றும் மன்ற நிர்வாகிகள் பங்கேற்று உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.