நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வன்முறையை தூண்டும் வகையிலும், அவதூறாகவும் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 500 பேர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.