ஸ்டேட் பவர் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு! ஐடிஐ, டிப்ளமோ முடிச்சா போதும்..உடனே விண்ணப்பீங்க!

PSPCL

PSPCL பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (PSPCL) தற்போது உதவி துணை நிலைய உதவியாளர் (Assistant Sub-Station Attendant)  மற்றும் டெஸ்ட் மெக்கானிக் (Test Mechanic)  ஆகிய பதவியின் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியீட்டு இருக்கிறது. இந்த வேலையில் சேர என்னென்ன தகுதி வேண்டும் எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

READ MORE- மத்திய அரசு வேலை! 2049 காலிப்பணியிடங்கள்… 10, 12ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்..

காலியிடங்கள் எண்ணிக்கை

இந்த உதவி துணை நிலைய உதவியாளர் (Assistant Sub-Station Attendant)  மற்றும் டெஸ்ட் மெக்கானிக் (Test Mechanic)  ஆகிய பணியில் வேலைக்கு சேர மொத்தமாக 433 காலியிடங்கள் உள்ளது. உதவி துணை நிலைய உதவியாளர் பணிக்கு 408 இடங்களும், டெஸ்ட் மெக்கானிக் பணிக்கு 25 காலியிடங்கள் உள்ளது.

தேவையான தகுதி

(Assistant Sub-Station Attendant)  – பணிக்கு 

  • குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் ஐடிஐ, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரிகல், எலக்ட்ரீசியன், வயர்மேனில் முழு நேர வேலை அனுபவம் மற்றும் PSEB-யில் 2 வருட பயிற்சி அனுபவம் கண்டிப்பாக வேண்டும். (

(Test Mechanic) – பணிக்கு 

  • ஐ.டி.ஐ.யில் இருந்து எலக்ட்ரீசியன் அல்லது இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் வர்த்தகத்தில் இரண்டு வருடம் படித்திருக்க வேண்டும்.

Read More – B.Com, CA முடித்திருந்தால் அனல் மின் நிலையத்தில் வேலை…35 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம்.!

சம்பள விவரம் & வயது தகுதி

இந்த பணியில் வேலைக்கு சேர விரும்பி விண்ணப்பிக்கும் விண்ணப்ப தாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்களுக்கு சம்பளமாக மாதம் 19,900 வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், வேலையில் சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களின் வயது 18 வயதில் இருந்து  37 வயதிற்குள் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யமுடியும்.

முக்கியமான தேதிகள்

இந்த பணியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு கடந்த கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி வெளிவந்தது. மார்ச் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பம் தொடங்கியது. மார்ச் 26 -ஆம் தேதி இந்த பணியில் சேர கடைசி தேதி எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

Read More – B.Sc முடித்திருந்தால் போதும் தோட்டக்கலை அதிகாரி வேலை.! உடனே விண்ணப்பியுங்கள்…

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியில் சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.pspcl.in/ க்கு சென்று அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் “ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” இணைப்பைக் கிளிக் செய்யவும். பிறகு ஒரு படிவம் வரும் அந்த படிவத்தை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் விவரத்தை உங்களுடைய சரியான ஆவணங்களை வைத்து நிரப்பவேண்டும். நிரப்பிவிட்டு நீங்கள் நிரப்பியது சரியானதா என்று பார்க்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் தகவலை தெரிந்து கொள்ள இந்த PDF-யை பார்வையிடவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்