காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் ஒரு நாளைக்கு முன்னதாகவே முடியும் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
40 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசன நிகழ்வு இந்த ஆண்டு நடைபெறுகிறது. காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் இருக்கும் அத்திவரதரை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். முதலில் படுத்த கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் தற்போது நின்று கட்சி அளிக்கிறார்.
இதுவரை 70மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். ஆகஸ்ட் 17 ம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவைடையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஒரு நாள் முன்னதாகவே தரிசனம் நிறைவடையும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.