அஜித், சிம்பு திரைப்படத்தை பார்க்காதீர்கள்.! சூர்யா படத்தை பாருங்கள் .!

Default Image

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அணைத்து கடைகளும், மக்கள் கூடும் வணிக வளாகங்கள், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் பலரும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை வேண்டுகோளின் பேரில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ஊரடங்கு உத்தரவை மதித்து, இளைஞர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என இயக்குநர் கவுதம் மேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் வீட்டில் இருக்கும் பொழுது தான் இயக்கிய அச்சம் என்பது மடமையாடா, என்னைஅறிந்தால் ஆகிய திரைப்படங்களை பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏனென்றால், “அச்சம் என்பது மடமையாடா” திரைப்படத்தில் சிம்பு தனது காதலியைக் கூட்டிக் கொண்டு ஒரு சாலைப் பயணம் செல்வார்.’என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அஜித் தன் மகளை ஊர் ஊராகக் கூட்டிச் செல்வார். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அதைச் செய்யாதீர்கள் என தெரிவித்துள்ளார்.
“வாரணம் ஆயிரம்” படத்தை  பாருங்கள். அதில் கடினமான தருணங்களில்  எப்படி நம்மை தயார்படுத்தி மீண்டு வரலாம்  என அந்த படத்தில் காட்டப்பட்டு இருக்கும் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்