நடிகை நயன்தாரா சமீபகாலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் கூட கனெக்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்தால் கூட விமர்சன ரீதியாக வெற்றிபெறவில்லை.
unknown nodeNayanthara [Image Source : Google]
இந்த நிலையில், நடிகை நயன்தாரா அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அது என்னவென்றால், இனிமேல் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடிக்கவேண்டும் என்று திட்டமிட்டுள்ளாராம். ஆரம்ப காலகட்டத்தை போல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடிக்க போகிறாராம்.
unknown nodeNayanthara [Image Source: Twitter ]
எனவே இனிமேல் நயன்தாரா படத்தில் தனக்கு முக்கியத்துவம் இருந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க மட்டுமே முடிவெடுத்திருக்கிறாராம். அந்த வகையில், தான் தற்போது அவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இயக்குனர் அகமத் இயக்கத்தில் உருவாகும் ‘இறைவன்’ படத்தில் நடித்து வருகிறார்.
unknown nodeNayanthara Sad [Image Source: Twitter ]
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படத்திலும் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.