ரஜினி சொல்வது நிஜத்தில் நடக்காது! இந்தியாவில் புரட்சி வெடிக்காது! – எஸ்.வி.சேகர்

Default Image

நடிகர் ரஜினிகாந்த் அவர் அரசியல் நிலைப்பாடு குறித்து, நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியுளளார். இந்த சந்திப்பின் போது, ரஜினி தனது அரசியல் குறித்த திட்டங்களை கூறியுள்ளார். இதற்க்கு, பலரும் தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், இதுகுறித்து நடிகர் எஸ்.வி.சேகர் அவர்கள் கூறுகையில், ‘முதல்வர் பதவி குறித்து, நான் நினைத்து பார்த்தது இல்லை. சட்டசபையில் உட்கார்ந்து பேசும் எண்ணம், எனக்கு ஒருபோதும் கிடையாது. அது எனக்கு செட் ஆகாது என ரஜினி கூறியிருக்கிறார். அவர் க்கூறுவதை பார்த்தால், பத்திரிகை ஆச்சிரியர் குருமூர்த்தியை முதல்வராக்கி அழகு பார்க்க நினைக்கிறாரா என தெரியவில்லை என கூறியுள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், கட்சியை நடத்த பணமும், ஆட்சியை நடத்தா ராஜதந்திரமும் தேவை. எனவே, ரஜினி சொல்வது, நிஜத்தில் நடக்காது. இந்தியாவில் புரட்சியும் வெடிக்காது. ரஜினி சொல்வதெல்லாம் புஷ்வாணமாகிவிடும்.’ என கூறியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்