வெங்கட் பிரபுவின் அடுத்த படம் இவருடன் தான்.! அதிரடியாக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

Default Image

மாநாடு படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் வெங்கட் பிரபு அடல்ட் காமெடி படமான மன்மத லீலை படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

venkatprabhu-tcekdVbgeagij

இந்த படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆனால் வசூல் ரீதியில் இந்த படத்திற்கு நல்ல ஒரு வெற்றி கிடைத்துள்ளது என்றே கூறலாம். ஆம் இதுவரை 20 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

venkat

இந்த நிலையில், தற்போது வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வெங்கட் பிரபு அடுத்ததாக தெலுங்கு நடிகர் நாகா சைதன்யா வை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்க்ரீன்ஸ் சார்பாக இப்படத்தை ஶ்ரீனிவாச சித்துரி தயாரிக்கிறார்.பெரிய பட்ஜெட்டில் , சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு தற்காலிகமாக “NC22” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கடவுள் நல்லவர் எல்லாம் வல்ல இறைவன் மற்றும் எனது ரசிகர்களின் ஆசியுடன் எனது அடுத்த இருமொழிப் படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என வெங்கட் பிரபு இந்த படத்திற்கான அறிவிப்பை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்