மீசை வைத்த குழந்தை போல இருக்கும் இசைப்புயல்.! வைரலாகும் புகைப்படம்.!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் முதன்முறையாக மீசை வைத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் முதன்முறையாக மீசை வைத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழில் ரோஜா என்ற படத்தின் மூலம் தனது இசை பயணத்தை ஆரமித்து தற்போது ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் கலக்கி வருபவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். இசைப்புயல் என அழைக்கப்படும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிங்கர்களுடன் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  மீசை வைத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுடுள்ளார். அதில் ஜூம் ஆப் லைவ் ஸ்டுடியோ என்ற ஆஜ செயலி மூலம் இப்புகைப்படத்தை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node

மேலும், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தற்போது தமிழில், பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு, பத்து தல, அயலான், கோப்ரா ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.