மருத்துவமனையில் உயிருக்கு போராடும் தாயார்.. திடீரென திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை.!

Default Image

நடிகை ராக்கி சாவந்த் தனது காதலர் அடில் துரானியை இன்று திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி இன்னும் திருமணம் செய்துகொண்ட  படங்களைப் பகிரவில்லை, ராக்கி சாவந்த் மட்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் வெளியிட்டுள்ளார்.

திடீரென இவர் திருமணம் செய்துகொண்டுள்ள கரணம் என்னவென்ற சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை, கடந்த சில நாட்களுக்கு முன்பு ராக்கி சாவந்த் தயாரான ஜெயந்தி சாவந்துக்கு மூளைகட்டி மற்றும் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் தனது தாயாரை பார்த்துக்கொள்வதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராக்கி சாவந்த் அவரச அவசரமாக வெளியே வந்தார். பிறகு கண்ணீர் மல்க வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். மேலும் தனக்காக பிரார்த்திக்குமாறு தனது ரசிகர்களிடம் ராக்கி வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.

இப்படி தயார் உயிர்க்கு போராடி வரும் நிலையில், நடிகை ராக்கி சாவந்த் தனது காதலர் அடில் துரானியை  அவசரமாக திருமணம் செய்துகொண்டுள்ளது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர்களுடைய திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்