இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeஇந்நிலையில், இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரத்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பொன்னியின் செல்வன் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியத் திரைப்பட வரலாற்றில் பொறிக்கப்படும் படமாக இது இருக்கும்.
unknown nodeமணி சார் எல்லாவற்றையும் கையாண்ட விதம், எல்லாமே பேசப்படும். பொன்னியின் செல்வன் புத்தகத்தைப் படித்த பலரும் அறிந்த விஷயம். படம் வெளியான பிறகு படத்தை புத்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.நானும் பிரகாஷ் ராஜும் ஒரு நாள் படப்பிடிப்பில் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
unknown nodeபடத்தின் ஒரு பகுதியாக இருப்பது எங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல். வானம் கொட்டட்டும் படத்திற்குப் பிறகு மணிரத்னம் ஒரு நாள் என்னை அழைத்து, பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் இருக்கு பண்றிங்களா என்று கேட்டார் நானும் சம்மதம் தெரிவித்தேன்.
unknown nodeபடப்பிடிப்பில் அவர் கடைபிடிக்கும் ஒழுக்கம் அசாதாரணமானது. இது வேலை, வேலை மற்றும் ஒரே வேலை. அவரது பணி ஒழுக்கம், நேர உணர்வு மற்றும் முழுமை ஆகியவை அவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டிய குணங்கள்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.