தயவு செய்து இவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுக்காதீர்கள் – நடிகர் கமலஹாசன்

Default Image

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  வருகிறது. இதானால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்கள் உணவிற்கு கூட கஷ்டப்பட்டு வருகிற நிலையில், பிரபாலங்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் இந்த மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலஹாசன், ‘நீங்கள் உதவி செய்ய செல்லும் இடங்களில் உதவி பெறுபவருடன் புகைப்படம் எடுப்பதை தயவு செய்து தவிர்த்து விடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், உள்ளம் வெம்பியிருக்கும் எளிய மக்களை இந்த புகைப்படம் எடுக்கும் படலம் காயப்படுத்தலாம். தாங்கள் கையேந்துவதற்காக அவர்களின் சுயமரியாதை பாதிக்கப்படலாம்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்