கதாநாயகனாக ரீ-என்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி பூஜையுடன் தொடங்கிய ‘பழனிச்சாமி வாத்தியார்’.!

Default Image

தமிழ் சினிமாவில் கவுண்டர் கிங் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கவுண்டமணி  நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ” பழனிச்சாமி வாத்தியார் ” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். ஒரு காலகட்டத்தில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வந்த இவர் கடைசியாக தமிழில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான வாமை எனும் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து கவுண்டமணி  எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு இவர் தமிழ் சினிமாவில் ரசிகர்களை சிரிக்க வைக்க வருகிறார். அதன்படி, இவர் தற்போது ” பழனிச்சாமி வாத்தியார் ” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் பிரமாண்டமாக தயாரிக்கிறார். படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து யோகி பாபு, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த ” பழனிச்சாமி வாத்தியார் ” திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கவுண்டமணி  சினிமாவிற்குள் நடிக்க வந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்