கதாநாயகனாக ரீ-என்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி பூஜையுடன் தொடங்கிய ‘பழனிச்சாமி வாத்தியார்’.!
தமிழ் சினிமாவில் கவுண்டர் கிங் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கவுண்டமணி நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ” பழனிச்சாமி வாத்தியார் ” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். ஒரு காலகட்டத்தில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வந்த இவர் கடைசியாக தமிழில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான வாமை எனும் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து கவுண்டமணி எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு இவர் தமிழ் சினிமாவில் ரசிகர்களை சிரிக்க வைக்க வருகிறார். அதன்படி, இவர் தற்போது ” பழனிச்சாமி வாத்தியார் ” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த படத்தை வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் பிரமாண்டமாக தயாரிக்கிறார். படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து யோகி பாபு, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த ” பழனிச்சாமி வாத்தியார் ” திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கவுண்டமணி சினிமாவிற்குள் நடிக்க வந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.