கே.வி.ஆனந்த் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது – ரஜினி காந்த..!!

Actor Rajinikanth has expressed his condolences on Twitter for the death of director KV Anand.

இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்டரில் இரங்கலை தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களாக திரையுலகில் பிரபலங்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து வருவது திரையுலகை சற்று கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிக

ந்த் ட்வீட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதில் ” மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

unknown node