நடிகை காஜல் அகர்வால் கணவருடன் கடலுக்கடியில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் அண்மையில் தொழிலதிபர் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் கோலாகலமான முறையில் நடைபெற்றது, ஊரடங்கு இன்னும் அமலில் இருப்பதால் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவரது திருமணம் நடைபெற்றது. அண்மையில் தனது கணவருடன் தேனிலவு செல்வதாக காஜல் தெரிவித்திருந்த நிலையில் மாலத்தீவுக்கு இவர்கள் இருவரும் தேனிலவுக்காக சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் எடுக்கக்கூடிய சுவாரசியமான புகைப்படங்கள் பலவற்றை தனது இணையதள பக்கத்தில் காஜல் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்பொழுது பிகினி உடையில் தனது கணவருடன் மீன்களுடன் இணைந்து நீந்துவது போன்ற புகைப்படங்கள் சிலவற்றையும் காஜல் இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeunknown nodeunknown node