வாய்ப்பிருந்தால் வந்து போ மகளே…. விஜய் தொலைக்காட்சி சார்பாக மறைந்த நடிகை சித்ராவிற்கான இரங்கல் கவிதை வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
சின்னத்திரையின் செல்ல மகள் சித்ரா தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் இன்று வரையிலும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. சித்ரா மரணத்திற்கா கரணம் குறித்து பல கோணங்களில் விசாரணையும் நடத்தப்பட்டு கொண்டு தான் உள்ளது. இந்நிலையில் அவர் பணியாற்றிய தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சிக்கு தான் இது மிக பெரிய இழப்பு.
அவர்கள் சார்பாக தங்கள் வருத்தத்தையும் இரங்கலையும் அடிக்கடி தெரிவித்து வருகின்றனர். இன்னும் முல்லை இறுதியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி கூட வெளியிடப்படவில்லை, இந்நிலையில், முல்லையாக விஜய் தொலைக்காட்சியில் பிரபலமடைந்த மறைந்த நடிகை சித்ராவுக்காக கவிதை வடிவிலான வீடியோ ஒன்று தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown node