நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அவரிடம் பல கேள்விகளும் கேட்கப்பட்ட நிலையில், அதற்கு அவரும் பதில் அளித்துள்ளார். அப்போது தொகுப்பாளர் அவரிடம் உங்களுக்கு எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை என கேள்வி கேட்டார்.
unknown nodeஅதற்க்கு பதில் அளித்த ரகுல் ப்ரீத் சிங் ” எனக்கு நடிப்புக்கு சவால் விடும்படியான கதாபாத்திரதில் நடிக்க மிகவும் ஆசை. ஆனால், எனக்கு இதுவரை நான் விரும்பிய படி, நடிப்புக்கு சவால் விடும்படியான கதாபாத்திரம் வரவே இல்லை. நான் கதைகளை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறேன்.
unknown nodeவித்தியாசமான ஒரு நல்ல கதாபாத்திரங்களை நடிப்பதற்காக தேடுகிறேன். எனக்கு மிகச்சிறந்த கமர்சியல் கதையில் நடிக்கவும் வாய்ப்பு வரவேண்டும் அதுவும் என்னுடைய ஆசை தான். மொத்தத்தில் என் நடிப்புக்கு சவால் விடும்படியான கதாபாத்திரத்தில் நடிக்க காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
unknown nodeமேலும். நடிகை ரகுல் ப்ரீத் சிங் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள அயலான் திரைப்படம் வரும் நவம்பர் 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.