அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களை சிரிக்க வைத்த கோவை குணா இன்று காலமானார். தனது மிமிக்கிரியால் பலரின் மனிதில் இடம்பிடித்த குணா அசத்த போவது யாரு நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னரும் கூட, இவருடைய மறைவு பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால்குணாகோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் கோவை குணா சிவாஜி கணேசன், கவுண்டமணி உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களின் குரல்களில் மிமிக்ரி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.