சூரியின் வெறியாட்டம்..வசூலில் கலக்கும் கருடன்! தமிழகத்தில் மட்டும் இவ்வளவா?

Default Image

கருடன் : துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த மே 31-ஆம் தேதி வெளியான “கருடன்” திரைப்படம் விமர்சன ரீதியாக பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது. வெளியான நாளில் இருந்து படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். எங்கு பார்த்தாலும் கருடன் படம் பற்றி தான் மக்கள் பேசி வருகிறார்கள்.

அந்த அளவுக்கு படத்தில் சூரியின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருக்கிறது. அத்துடன் படத்தின் கதையும் கிராமத்து ஸ்டைலில் இருக்கும் காரணத்தால் படத்தினை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று கொண்டு வருகிறார்கள். இதனால் நாளுக்கு நாள் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பும், வசூலும் அதிகரித்து கொண்டு  வருகிறது.

இந்நிலையில், படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, கருடன் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 18 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் மொத்தமாக இதுவரை 17 கோடி வசூல் செய்து இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மட்டும் வெளியான மூன்றே நாளில் 17 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்னுமே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், இந்த திரைப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா,சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மிமீ கோபி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்