மக்களுக்கு சேவையாற்ற நர்ஸாக மாறிய பிரபல இந்தி நடிகை!

Default Image

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாகி வருவதால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

 இந்நிலையில், இந்தி நடிகை ஷிகா மல்கோத்ரா, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நர்சாக மாறி இருக்கிறார். இவர் நர்சிங் பட்டப்படிப்பை முடித்துள்ள  நிலையில், கதாநாயகி ஆனதால்  செவிலியர் வேலை பார்க்காமல் இருந்துள்ளார். இப்போது மக்களுக்காக அந்த பணியை ஏற்றுள்ளார்.

ஆஸ்பத்திரியில் நர்சு சீருடை அணிந்து வேலைபார்க்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “இந்த மோசமான தருணத்தில் மக்களுக்கு நர்சாக சேவையாற்ற முடிவு செய்துள்ளேன். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். அரசுக்கு உதவுங்கள்” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்