பிக் பாஸ் 1 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ஜூலி தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் சில நடன நிகழ்ச்சிகளும் கலந்துகொண்டு சிறப்பான நடனத்தை வெளிப்படுத்து வருகிறார். அந்த வகையில், ஜூலி சமீபத்தில் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் வாழ்வில் நடந்த சோகமான விஷயம் பற்றி பேசியுள்ளார்.
unknown nodeஆம் பிரபல நிறுவனத்திடம் தான் 3 லட்சம் ரூபாய் ஏமாந்து விட்டேன் என கண்ணீருடன் பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” நான் லண்டனில் நர்ஸ் வேலைக்காக மும்பை ஏஜென்சி நிறுவனத்திடம் 3 லட்சம் ரூபாய் பணம் கட்டிருந்தேன். அந்த பணமும் நான் கஷ்டப்பட்டு நர்ஸ் வேலை செய்ததன் மூலம் சேர்த்து வைத்தது.
இதையும் படியுங்களேன்-கார்த்தி கூட தான் டேட்டிங் போகணும்… சர்ச்சையை கிளப்பிய ஜீவிதாவின் ஆசை.!
unknown nodeஅப்போது ஒரு நாள் நான் பணம் கட்டிய மும்பை ஏஜென்சி நிறுவனம் என்னை ஏமாற்றிவிட்டதாக தகவல் வந்தது. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது என்ன செய்வதென்றே ஒன்னும் புரியவில்லை. நடுரோட்டில் நின்று கொண்டு என்னுடைய அப்பாவுக்கு ஃபோன் செய்து நாம் ஏமாந்துட்டோம் என்று சொன்னேன்.
unknown nodeஅதற்கு அவர் காசு, பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ளலாம்.. நீ வந்துவிடுமா வீட்டுக்கு என்று சொன்னார். அவர் அப்படி சொன்னவுடனே எனக்கு கண்ணீர் வந்துவிட்டது… நான் இந்த அளவிற்கு முன்னேறி இருப்பதற்கு என்னுடைய அப்பா தான் கரணம்” என வருத்தத்தில் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.