இயக்குனர் வசந்த பாலன் மருத்துவமனையில் அனுமதி..!

Director Vasanthapalan has been diagnosed with corona infection and admitted to hospital

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பது ” அன்புள்ள நண்பர்களுக்கு நான் கொரோனோ பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஆதலால் பலருடைய தொலைபேசி அழைப்பை எடுக்க இயலமுடியவில்லை. என் மீது பேரன்பு கொண்ட நண்பர்கள், மருத்துவர்கள், உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதிற்குள் ஆயிரம் யானை பலம் கூடி வருகிறது. ஈராறு கால்கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன்” என்று தெரிவித்துள்ளார்

இவர் வெயில், காவிய தலைவன், அங்காடி தெரு போன்ற திரைப்படங்களை இயக்கியவர். தற்போது நடிகர் அர்ஜுன் தாஸை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.