ப்ளூ ஸ்டார் படத்தில் அசோக் செல்வனுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இவரா?

blue star film ashok selvan

இயக்குனர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு பாக்யராஜ், உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ப்ளூ ஸ்டார்”. இந்த திரைப்படத்தினை பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படம் மிகவும் அருமையாக இருப்பதன் காரணத்தால் படத்தை பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்களை கூறிவருகிறார்கள்.  இந்நிலையில், இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன் நடித்த கதாபாத்திரத்தில் முதல் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவலை இயக்குனர் எஸ். ஜெயக்குமார்  சமீபத்திய பேட்டி ஒன்றில்  தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” முதலில் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் அசோக் செல்வன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நடிகர் கவினை தான் முடிவு செய்தேன்.

“ப்ளூ ஸ்டார் படம் வெளிவரக்கூடாது” சென்சார் மீது பா.ரஞ்சித் குற்றச்சாட்டு..!

நான் கதையை கவினிடம் சொன்னேன், அவருக்கு ஸ்கிரிப்ட் பிடித்திருந்தது. கவின் படத்தை தயாரிப்பதற்காக என்னை ஒரு தயாரிப்பாளரிடம் அறிமுகப்படுத்தினார், ஆனால் கவின் திரைப்படங்களின் கமிட்மென்ட் காரணமாக, அவரால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.

கவினால் நடிக்க முடியாது என்று தெரிந்த பிறகு நான் படத்தின் கதையை அசோக் செல்வனிடம் கூறினேன். நான் கதையை குறியே பிறகு உடனடியாகவே நான் படத்தில் நடிக்கிறேன். கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று அசோக் செல்வன் கூறினார் எனவும் ” எஸ். ஜெயக்குமார்  கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்