புயலின் சேதங்களுக்கு நடுவே நடனமாடி போஸ் கொடுத்த தீபிகா சிங்..! கடும் விமர்சனம்

Actress Deepika Singh has taken photos among the trees uprooted by the storm and posted them on her Instagram page.

நடிகை தீபிகா சிங் புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு அரபி கடல் பகுதியில் உருவான டவ்-தே புயல் அதி தீவிர புயலாக மாறி குஜராத்தில்,சவுராஷ்டிரா கடற்கரையின் டியு மற்றும் உனா இடையே கரையை கடந்தது.

இதனால் குஜராத், சவுராஷ்டிரா, மும்பை, ராஜஸ்தான், ஆகிய பகுதியில் கனமழை பெய்தது. மேலும் டவ்-தே புயல் குஜராத் மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது இந்த புயல் காரணமாக சுமார் 6000 கிராமத்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்காக ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், டவ்-தே புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே பிரபல நடிகையான தீபிகா சிங் நடனமாடி புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டுள்ளார். அதில் “புயலை நாம் தடுத்து நிறுத்த முடியாது அதுவாகவே கடந்து போகும்” என்று பதிவிட்டுள்ளார். நடிகை தீபிகா சிங்கின் இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

unknown nodeunknown nodeunknown node