பிக்பாஸ் சிபி மற்றும் அக்சரா இருவருக்கும் இடையே கலவரம்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நிகழ்ச்சி, 50 நாட்களை கடந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தற்போது வீட்டினுள் உள்ள அனைவருக்கும் ‘கனா காணும் காலங்கள்’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் அனைவரும் பள்ளி மாணவர்களாக உள்ளனர். அவர்களுக்கு தலைமை ஆசிரியராக சிபி உள்ளார். இந்நிலையில், அக்சரா தனது ஆடையை அயர்ன் பண்ணுவதற்கு, சிபியிடம் நேரம் கேட்கிறார். அதற்கு சீக்கிரம் சென்று வருமாறு கூறுகிறார். இதனால், ஆத்திரமடைந்த அக்சரா அங்கிருந்த பூந்தொட்டியை தள்ளிவிட்டு, நீ யாரு சொல்றதுக்கு? என கோபமாக கேள்வி கேட்கிறார். இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் சற்று நேரம் பரபரபபான் சூழல் ஏற்பட்டது.
unknown node