சித்தி சீரியலில் நடித்ததால் பயங்கர திட்டு! நடிகை யுவராணி வேதனை!

Yuvarani

சென்னை : சினிமாவில் இளமையாக இருக்கும்போது ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வருவது போல கொஞ்சம் வயதாகி விட்டது என்றால், அந்த காலகட்டத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வரும். ஒரு சில நடிகைகளுக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் சீரியலில் நடிக்க வாய்ப்பு வரும். அவர்களும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவேண்டும் என்பதற்காக நடித்து விடுவார்கள். அப்படி தான் சித்தி சீரியலில் நடிகை யுவராணி வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இவர் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான்  யுவராணி . இப்போது இருக்கும் 2k கிட்ஸ்களுக்கு தெரியும்படி சொல்லவேண்டும் என்றால் லியோ படத்தில் இடம்பெற்று இருந்த தாமரைப்பூவுக்கும் பாடலில் வரும் ஹீரோயின் என்று சொல்லலாம். இவர் சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சின்னத்திரை பக்கம் சென்று இருக்கிறார்.

சின்னத்திரையில் இவர் சித்தி சீரியலில் நடித்தது பெரிய அளவில் பேசப்பட்டது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு வில்லித்தனமான கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த காரணத்தால் மிகவும் மக்களிடம் இருந்து திட்டு வாங்கியதாக சமீபத்தில் அவர் பேசியுள்ளார்.

சென்னையில், நடைபெற்ற விருது வாங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் “தாமரைப்பூவுக்கும் பாடல் சமீபத்தில் மீண்டும் ட்ரெண்ட் ஆனது. அதனை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்காக நான் லோகேஷ் கனகராஜிற்கு நன்றியை தெரிவித்து கொள்ளவிரும்புகிறேன். சித்தி சீரியலில் நடித்த போது நான் வாங்காத திட்டே இல்லை. வில்லி கதாபாத்திரத்தில் நடித்த காரணத்தால் ரொம்பவே திட்டு வாங்கினேன.

ஹீரோயினாக படங்களில் நடித்துவிட்டு வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பது சாதாரண விஷயம் இல்லை. ரொம்பவே சவாலான ஒரு விஷயம் என்று நான் சொல்வேன். வில்லியாக நடிக்கும்போது நிறைய வேதனையை அனுபவித்தேன். எப்படி எல்லாம் பாராட்டு வந்ததோ அப்படியெல்லாம் திட்டும் வந்தது என்றார் யுவராணி. இவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் வில்லியாக நடிக்கிறதுக்கு கஷ்டம் தான் என கூறி வருகிறார்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்