மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “திரௌபதி”. இந்த படத்தில் கதாநாயகியாக ஷீலா ராஜ்குமார் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றது.
unknown nodeஇந்நிலையில் சமீபத்தியா ஒரு பேட்டியில் தொகுப்பாளர் தொடர்ந்து ரௌபதி படத்தில் நடித்த போது அது பாசிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. உங்களை பொறுத்தவரை திரௌபதி படம் சமூக அக்கறையுள்ள படமா..? என்று கேள்வி கேட்டுள்ளார்.
unknown nodeஅதற்கு பதில் அளித்த நடிகை ஷீலா, ” ‘இப்ப வரைக்கும் திரௌபதி படத்தில் நடித்தது ஒரு கெட்ட கனவாகவே உள்ளது. ஏனென்றால் இயக்குனர் என்னிடம் முழு கதையை சொல்லவில்லை. அதுக்கு தான் நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னது தான். இயக்குநர்கள் வெளிப்படையாக இருந்தால் அன்றைய தினத்தின் முடிவு என் கையில் இருக்கும். அதனால ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள தயாராவேன். இதுதான் எதார்த்தமான உண்மை.
unknown nodeஎனக்கு பொதுவாகவே அரசியல் தெரியாது. என்னுடைய வேலையை சரியா பண்ணனும் என்று நினைக்கிறேன். அதுனால என்னுடைய வேலையை நீங்கள் தெளிவாக சொல்லிவிட்டார்கள் என்றால், அதை பண்ணுவதும், பண்ணாததும் என்னுடைய விருப்பம்” என தெரிவித்துள்ளார்.