பரியேறும் பெருமாள் பட நடிகர் நெல்லை தங்கராஜ் காலமானார்.!

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமான தெருக்கூத்துக்கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமான தெருக்கூத்துக்கலைஞர் நெல்லை தங்கராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்.

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் தெருக்கூத்துக்கலைஞர் நெல்லை தங்கராஜ் . கடந்த சில நாட்களாகவே தங்கராஜ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .

இதனையடுத்து, இன்று அதிகாலை 5 மணி அளவில் சிகிச்சை பலனின்றி தங்கராஜ் காலமானார். இவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.