நடிகர் துருவ் விக்ரம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
நடிகர் துருவ் விக்ரம் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனது அப்பா விக்ரமுடன் கேங்ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் மாரி செல்வராஜுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் இயக்குனர் மாரிசெல்வராஜிற்கும் நடிகர் துருவ் விக்ரமிற்கு 3 வது திரைப்படமாக உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் விரைவில் வரவவுள்ளது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரமை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் கதை முழுக்க முழுக்க கிராமத்தில் நடக்கும் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கவுள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node