தூக்கில் தொங்கியபடி நடிகரின் மனைவி சடலமாக மீட்பு.! பேரதிர்ச்சியில் மலையாள திரையுலகம்.!

Default Image

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான உல்லாஸ் பந்தளம் மனைவி ஆஷா நேற்று வீட்டில்  தூக்கில் தொங்கவிடப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியை காணவில்லை என உல்லாஸ் பந்தளம் காவல் துறையில் புகார் கொடுத்திருந்தார்.

இதனையடுத்து,  புழிக்காட்டில் உள்ள வீட்டுக்கு வந்த போலீஸார், வீட்டின் மாடி அறையில் ஆஷா இறந்து கிடந்ததைக் கண்டுபிடித்தனர். சடலத்தை மீட்டு  அடூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஆஷாவும் குழந்தைகளும் இரவில் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இந்த சம்பவம் நடந்த போது வீட்டில்  உல்லாஸ் இருந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில்,  தற்கொலை என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்வவம் தற்போது மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்