குழந்தைகள் செய்த செயல்! கடும் அதிர்ச்சியாகி மேடையை விட்டு ஓடிய சூர்யா!

கங்குவா இசை வெளியீட்டு விழாவில் மேடையில் ஏறிய வேகத்தில் சூர்யா கீழே இறங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

KanguvaAudioLaunch

சென்னை : கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சூர்யா, தேவிஸ்ரீ பிரசாத், சிறுத்தை சிவா, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். சூர்யா வருகை தந்த காரணத்தால் இசை வெளியீட்டு விழாவே திருவிழா போன்று இருந்தது.

விழாவிற்கு வருகை தந்த சூர்யாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில், குழந்தைகள் பலரும் இணைந்து கங்குவா இசை வெளியீட்டு விழாவின் மேடையில் கங்குவா பாடலுக்கு மிரட்டலான நடனத்தை வெளிப்படுத்தினார்கள். இதனை அங்கிருந்த மக்களுடன் சேர்ந்து சூர்யாவும் ” என்ன இவர்கள் இப்படி நடனம் ஆடுகிறார்கள் இந்த வயதில்” என ஆச்சரியத்துடன் பார்த்தார்.

பிறகு நடனம் செய்து முடித்த பிறகு சூர்யா தனது கைகளை தட்டிக் கொண்டு நடனமாடியவர்களை பார்த்து நன்றாக ஆடினீர்கள் என்பது போல செய்கையை காண்பித்தார். அதன் பிறகு, வேகமாக மேடைக்கு சென்ற அவர் நடனமாடிய அனைத்து சிறுவர்கள் மற்றும் சிறுமிர்களை தனது கையால் அரவணைத்துக் கொண்டு கைகளை கொடுத்தார்.

இதனை பார்த்த சிறுவர் ஒருவர் வேகமாக சூர்யா காலில் விழுந்தார். உடனடியாக சூர்யா ” காலில் விழ வேண்டாம் என்பது” போல அந்த சிறுவரை தூக்கினார். பிறகு அந்த சிறுவர் காலில் விழுந்ததை பார்த்த மற்றவர்களும்  வேகமாக சூர்யாவின் கால்களில் விழத்தொடங்கினார்கள்.  இதனால் சட்டன அதிர்ச்சியான சூர்யா வேகமாக அவர்கள் அனைவருடைய கைகளையும் மேலே தூக்கி விட்டு காலில் விழ வேண்டாம் என்பது போல பதட்டத்துடன் ஏறிய வேகத்தில் கீழே இறங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்