பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது தொடர்ந்து புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பி பிரபலமானவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தனக்கு பட வாய்ப்புகள் தருவதாக கூறி பல நடிகர்கள் மற்றும் சில இயக்குனர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாக பல ஊடகங்கள் முன்னிலையில் நிறைய புகார் கொடுத்து இருக்கிறார்.
unknown nodeஅடிக்கடி எதாவது பேசி சர்ச்சைகளும் சிக்கிவிடுவார். இதனால் என்னவோ, இவருக்கு பெரிதாக படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் வரவே இல்லை. தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட, இவரை தெரியாத ஆளே இருக்க முடியாது. அந்த அளவிற்கு பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இதையும் படியுங்களேன்-இனிமேல் நான் அப்படி நடிக்கவே மாட்டேன்…வேதனையில் பிரியா பவானி ஷங்கர்.!
unknown nodeஇந்நிலையில், சமீபத்திய பேட்டியில் ஸ்ரீ ரெட்டி அளித்த பேட்டி ஒன்றில் தன்னை 25 பேர் ஏமாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் 25 பேர் கிட்ட ஏமாந்திருக்கேன்.மிகப்பெரிய இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் என பலரும் என்னை ஏமாற்றியுள்ளனர். இளம் நடிகைகளுக்கு நான் சொல்வது ஒன்றுதான்.
unknown nodeகதைக்கு தேவை என்றால் மட்டும் கவர்ச்சியை காட்டி நடிங்கள். நான் அரை நிர்வாணமாக போராட்டம் செய்ததால் என் அம்மா, அப்பா, தம்பி என யாரும் தன்னிடம் பேசுவதில்லை” என வருத்தத்துடன் பேசியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.