தொடக்கத்திலேயே 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்.! 65,365 புள்ளிகளாக வர்த்தகம்.!

sensex

கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, கடந்த செப்டம்பர் 17ம் தேதி மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிந்தது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 231.90 புள்ளிகள் வரை சரிந்தது.

இந்த பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்றவை காரணமாக உள்ளன. இந்தியப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று அக்டோபர் 2ம் தேதி கண்டி ஜெயந்தியை முன்னிட்டு பங்குச்சந்தைகள் விடுமுறையில் இருந்தன. அந்த விடுமுறைக்கு முன்னதாக சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தது. ஆனால், இரண்டாம் நாளான இன்று 65,813 புள்ளிகள் என சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.

அதன்படி, சென்செக்ஸ் 463.19 புள்ளிகள் குறைந்து 65,365.22 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல, என்எஸ்இ நிஃப்டி 152.10 புள்ளிகள் குறைந்து 19,486.20 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,828 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,638 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

இதற்கு முன்னால் 19 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்த நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத் தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்