இந்திய பங்குச்சந்தை சரிவு.! சென்செக்ஸ் 66,371 புள்ளிகளாக வர்த்தகம்.!

sensex

இன்றைய வாரத்தின் தொடக்கம் முதலே இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்தது. இதற்கு முந்தைய வாரங்களில் சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிந்தும், நிஃப்டி 231.90 புள்ளிகள் வரை சரிந்தும் வர்த்தகமாகி வந்த நிலையில், இந்த வாரத்தில் மூன்று நாட்களாக ஏற்றத்துடன் வர்த்தகம் நடைபெற்று வந்தது.

கடந்த வார பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்றவை காரணமாக கூறப்படுகிறது. இந்தியப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டது.

இந்நிலையில், வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்றும் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 66,564 புள்ளிகள் என ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 101.11 புள்ளிகள் சரிவடைந்து 66,371.94 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதேபோல, என்எஸ்இ நிஃப்டி 17.45 புள்ளிகள் சரிவடைந்து 19,793.90 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 66,473 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல, நிஃப்டி 19,811 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதற்கு முன்னால் 19 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்த நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத் தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்