ஓபிஎஸ் நடத்துவது கட்சி கூட்டம் அல்ல – ஜெயக்குமார் விமர்சனம்

பண்ருட்டி ராமச்சந்திரன்மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை. திமுக அரசுக்கு எதிராக ஒத்திவைக்கப்பட்ட மாவட்டங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சொத்து வரி, பால்விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து, திமுக அரசுக்கு எதிராக ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான கூட்டம் கட்சி கூட்டம் அல்ல என விமர்சித்துள்ளார். ஓபிஎஸ் நடத்தும் கம்பெனியில் இயக்குநர்கள் குழு கூட்டம்தான் நடந்து கொண்டிருக்கிறது. மூத்த அரசியல்வாதியான … Read more

திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்!

திமுக அரசுக்கு எதிராக ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திமுக அரசுக்கு எதிராக ஒத்திவைக்கப்பட்ட மாவட்டங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சொத்து வரி, பால்விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திருத்தணியில் ரமணா, சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அனைத்துக்கட்சி கூட்டம்.! இபிஎஸ்க்கு அழைப்பு.. ஓபிஎஸ்க்கு அழைப்பு இல்லை.! ஜெயக்குமார் விமர்சனம்.!

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்கிற முறையில் இபிஎஸிற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஓபிஎஸிற்கு அழைப்பில்லை. – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.  இந்தியா தலைமையில் இந்த வருடம் நடைபெறும் ஜி20 மாநாடு பற்றி கலந்தாலோசனை செய்வதற்கு இந்தியா முழுவதும் உள்ள பிரதான கட்சிகளுக்கு அழைப்பு விளக்கப்பட்டது. இந்த அனைத்துக்கட்சி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் திமுகவுக்கு அழைப்பு வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள … Read more

பேனர் ஊழல்.. ஆதாரம் இருக்கிறது.! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு.!

ஒரு விளம்பர பேனர் 6,700 ரூபாய்க்கு அச்சடிக்கப்பட்டு, ஜிஎஸ்டி வரி 603 உட்பட மொத்தமாக 7,906 ரூபாய் செலவு கணக்கிடப்பட்டுள்ளது. – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். கிராமப்புறங்களில் நம்ம ஊரு சூப்பரு எனும் திட்ட விளம்பர பலைகையில் ஊழல் நடைபெற்று இருந்ததாகவும், ஒரு விளம்பர பலகைகாக மட்டுமே 7,906 ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் … Read more

முதல்வர் தொகுதியில் தவறான சிகிச்சை அளித்து மாணவி உயிரிழப்பு.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.!

வீராங்கனை பிரியா சிகிச்சை பெற்ற பெரியார் அரசு மருத்துவமனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியில் தான் இருக்கிறது. அங்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக  தான் பிரியாவின் உயிரிழந்துள்ளார். – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ தவறான சிகிச்சையின் காரணமாக, தேசிய அளவில் விளையாட்டு வீராங்கனையாக இருந்த … Read more

டிசம்பர் வரைக்கும் மழை இருக்கே எப்படி சமாளிப்பாங்க – ஜெயக்குமார்

இரண்டு நாள் மழைக்கே இப்படி பதறுகிறீர்கள் இன்னும் மழை இருக்கே என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைநீர் தேங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 2 நாள் மழைக்கே சென்னை இப்படி தத்தளிக்கிதே, டிசம்பர் வரைக்கும் மழை இருக்கே எப்படி சமாளிப்பாங்க என கேள்வி எழுப்பியுள்ளார். … Read more

தேர்தல் சமயத்தில் மட்டுமே கூட்டணி.. இதற்கு அவசியம் இல்லை – ஜெயக்குமார்

திமுகவுடன் அண்ணன், தம்பி உறவு எல்லாம் முடிந்துவிட்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. சென்னை புளியந்தோப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மாம்பலம், சைதாப்பேட்டை, வடசென்னையில் தண்ணீர் தேங்கியுள்ளது. வெள்ளத்தை வீடியோ எடுத்து செய்தியாக வெளியிட்டால் மிரட்டுகின்றனர். பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதை மறைக்க முயற்சி செய்கின்றனர். ஊடகங்களுக்கே இந்த நிலை என்றால் பாமர மக்களின் நிலை என்னவாகும். மழை வடிந்துவிட்டதாக மாயபிம்பத்தை உருவாக்குகின்றனர். முதல்வரின் தொகுதியான கொளத்தூரிலேயே … Read more

காவல்துறையினர் எங்களை ஆடு, மாடுகளை போல நடத்தினர் – ஜெயக்குமார்

சட்டமன்றத்தைப் பொறுத்தவரை அது திமுகவின் அறிவாலயமாக மாறிவிட்டது என ஜெயக்குமார் பேட்டி.  சட்டசபையில் அதிமுகவின் உரிமைகள் பறிக்கப்பட்டதாக கூறி, இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை அறிவித்தனர். அதற்கு இபிஎஸ் தரப்பில் இருந்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தியதால், இபிஎஸ் … Read more

#BREAKING: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கு ரத்து!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். நில மோசடி புகாரில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மகள், மருமகன் நவீன்குமார் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. மருமகனின் சகோதரர் சொத்துக்களை அபகரித்த புகாரில் ஜெயக்குமார் மீது வழக்கு பதியப்பட்டது. நில மோசடி புகாரின் வழக்கு விசாரணையின்போது, … Read more

நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரிகளாம் – ஓபிஎஸ் மீது ஜெயக்குமார் விமர்சனம்

அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் நியமித்தது தொடர்பாக கடுமையாக விமர்சித்தார். சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் பிறந்தநாநாளையொட்டி இன்று அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். அந்தவகையில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெயக்குமார், அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் நியமித்தது தொடர்பாக கடுமையாக விமர்சித்தார். … Read more