ஓபிஎஸ் நடத்துவது கட்சி கூட்டம் அல்ல – ஜெயக்குமார் விமர்சனம்

பண்ருட்டி ராமச்சந்திரன்மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை.

திமுக அரசுக்கு எதிராக ஒத்திவைக்கப்பட்ட மாவட்டங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சொத்து வரி, பால்விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து, திமுக அரசுக்கு எதிராக ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான கூட்டம் கட்சி கூட்டம் அல்ல என விமர்சித்துள்ளார்.

ஓபிஎஸ் நடத்தும் கம்பெனியில் இயக்குநர்கள் குழு கூட்டம்தான் நடந்து கொண்டிருக்கிறது. மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரன் ஏன் இப்படி மாறிவிட்டார் என்று தெரியவில்லை. பண்ருட்டி ராமச்சந்திரன்மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அதை அவர் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கூடா நட்பு கேடாய் முடியும் என பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடைய, சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச.ராமச்சந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment